வந்தே பாரத் ரயிலை 14 நிமிடங்களில் தூய்மைப்படுத்தும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உட்பட நாட்டின் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த ரயிலை தூய்மைப் படுத்த அரை மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால், ஜப்பானில் இயக்கப்படும் புல்லட் ரயில் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டு, அடுத்த 7 நிமிடங்களில் பயணத்தை தொடங்குகிறது. இதேபோன்று, இந்தியாவில் 14 நிமிடங்களிலேயே வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
यात्रीगण कृपया ध्यान दें!#SwachhataHiSeva pic.twitter.com/5k9CSk7oPR
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 1, 2023
இதையொட்டி, சென்னை, பெங்களூரு, திருப்பதி, நாக்பூர் உட்பட 29 ரயில் நிலையங்களில் வந்தே பாரத் ரயில்களில் 14 நிமிடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.