காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய தூதரக அதிகாரிகளை கொலை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது…

இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறி காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி கனடாவில் செயல்பட்டு வரும் கேடிஎஃப்( Khalistan Tiger Force) அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்தவர் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் எனக் கூறப்படுகிறது.

இவர் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு  இந்தியாதான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அதோடு உளவுப்பிரிவை சேர்ந்த மூத்த இந்திய தூதரக அதிகாரியையும் கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். பதிலுக்கு பதிலாக இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளும் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் தற்போது மூன்று இந்திய தூதரக அதிகாரிகளை கொலை செய்ய அழைப்பு விடுத்து கனடாவின் சுரே நகரில் வைக்கப்பட்ட போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சுரே நகர குருத்வாரா ஒன்றில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் காலிஸட்தான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்; அதாவது 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்யவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் படங்கள், பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தங்க நகைக் கடனை திருப்பி செலுத்த முடியலையா.? உங்களுக்கான சிறந்த ஆலோசனை இதோ..

இதையறிந்த கனடா அரசு உடனடியாக அந்த போஸ்டரை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதோடு இந்தியாவுக்கு எதிரான இத்தகைய பேனர்கள், போஸ்டர்களை குருத்வாராக்கள் முன்பு வைக்க தடை விதித்தும் கனடா உத்தரவிட்டுள்ளது. மேலும், குருத்வாராக்களில் லவுட் ஸ்பீக்கர் மூலம் பிரசங்கங்கள் நிகழ்த்தவும் கனடா அரசு தடை விதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் தூதரக ரீதியலான உறவில் கடும் விரிசல் விழுந்துள்ளது. இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் இந்த நெருக்கடியை மேலும் அதிகமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போல் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கும் அந்நாட்டு அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களோ, சமூக ஊடக கருத்துக்களோ பரப்பக் கூடாது என அமெரிக்க அரசு உத்தவிட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: