ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 2 ஆவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களத்தில் இறங்கினர். ருதுராஜ் 8 ரன்னில் வெளியேற, அடுத்ததாக கில்லுடன் இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
கில் 97 பந்துகளில் 104 ரன்னும், ஷ்ரேயாஸ் 90 பந்துகளில் 105 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கே.எல். ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர் போட்டியைப் போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 72 ரன்கள் குவித்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 399 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.