திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்லூரி கட்டிடம் பழுதடைந்து விரிசல் விட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.