விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்   குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்தாக வைத்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் வெங்கடேசன். சொத்தை பிரித்ததில் மூத்தவனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் தந்தை மீது கோபம் கொண்ட அடுத்த இரு மகன்களான  ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இருவரும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி மூத்த மகன் ஈஸ்வரனின் தூண்டுதலின் பேரில் இளைய மகன் முருகன் தனது சொந்த ஆட்டோவில் அந்த வழியாகச் சென்ற பெரியசாமி மீது வேகமாக கொலை செய்யும் நோக்கில் ஏற்றினார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு மகன் ஈஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி

இந்நிலையில்  அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று இறந்தார். இதனால் அவரது மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவாக உள்ள இரண்டாவது மகன் ஈஸ்வரனை கோட்டகுப்பம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.சொத்துக்காக தனது சொந்த தந்தையை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: