லாகூர்: இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார் நவாஸ் ஷெரீப். மேலும் அவர், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, ஜி20 கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதேநேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் நாடு, நாடகச் சென்று நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்.