அவை நூல்களைக் கொண்டு குறிப்பிட்ட கதாபாத்திரம்கொண்ட பொம்மை வடிவங்களை ஊசி மூலம் பின்னி அதன் இடைகளில் பருத்திப் பஞ்சு போன்றவற்றைக் கொண்டு அடைத்து பொம்மை உருவில் தயாரிப்பதாகும். இந்தப் பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருள்கள், கருவிகள் போன்றவற்றை `1 மில்லியன் ஹீரோஸ்’ நிறுவனமே வழங்கிவருகிறது. இந்தப் பயிற்சிகளில் நாய், பூனை, புலி, கரடி, மனித வடிவ பொம்மைகள் தயாரிக்க பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு, விற்பனையின் பெரும் பகுதி அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் மணிப்பூர் அரசாங்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் ஊதுவத்தி, துணி, சோப்பு, பாத்திரங்களைக் கழுவ பயன்படும் திரவம், காகிதப் பைகள் போன்றவற்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
நிவாரண முகாம்களில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்களையும் மணிப்பூர் கைத்தறி மற்றும் கைவினைக் கழகம் உரிய விலைக்கு வாங்கிக்கொள்ளும் என மணிப்பூர் அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை ஆணையர் அறிவித்திருக்கிறார். கலவரம் ஓயாத இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், பயிற்சித் திட்டத்தில் கிடைக்கும் சிறிய வருமானம் எங்களது நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதாக பயிற்சி பெறும் பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY