கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசினர் ஐடிஐயில் சேர்வதற்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. அந்தவகையில், கோவை ஐடிஐயில் சேர்வதற்கு தற்போது நடப்பாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதன் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை லாகின் செய்து தெரிந்துகொள்ளலாம்.
பின்னர், சம்மந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இதற்கு நாளை (12ம் தேதி) கடைசி நாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.