புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மாநிலங்களவையில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் கார்கே ஜி2 என்று மத்திய அரசு மீது தாக்குதல் தொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கும் பாஜகவின் பியூஷ் கோயலுக்கும் இடையேயும் வார்த்தை போர் நடந்தது.
இன்று (செப்.18) தொடங்கிய 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடரில் இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் தொடர்பாக நடந்த விவாதித்தின் போது சுமார் 65 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சிகளின் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசின் மீது தாக்குதல் தொடுத்தார். கார்கே தனது பேச்சில், "சரியான நேரத்தில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிடும். பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் நீடித்து வரும் வேலையில் நாம் ஜி2 பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.