ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி வட்டப் பாதை 5ஆவது முறையாக இன்று அதிகாலை உயர்த்தப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2-ஆம் தேதி ஆதித்யா-எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.செப்டம்பர் 3, 5, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 4 முறை சுற்றுவட்ட பாதை உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவும் அதிகப்பட்சம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா பயணித்து வந்தது.இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில், 5ஆவது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

இதனை பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதன்படி, சூரியன்-பூமி டயில் லக்ராஞ்சியன் ஒன் எனப்படும் எல்-1 புள்ளியை நோக்கிய தனது பயணத்தை ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.அடுத்த 110 நாட்களுக்கு பிறகு பூமிக்கும்-சூரியனுக்கும் இடையிலான எல்-1 புள்ளியில் இது நிலைநிறுத்தப்படும்.

இதற்கிடையே, அறிவியல் பூர்வமான தரவுகளை ஆதித்யா எல்-1 சேகரிக்கத் தொடங்கியதாகவும், அதில் உள்ள STEPS கருவி மூலம் அதிவெப்ப ஆற்றல்,அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: