ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் 12 ரன்னில் 6 விக்கெட்டை இழந்துள்ளது. இந்திய அணியின் முகம்மது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டால் ரிசர்வ் டே-யான நாளையும் ஆட்டம் தொடரும்.

இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைமதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் பெரேரா களத்தில் இறங்கினர். பெரோ ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா வேகத்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிசாங்கா 2 ரன்னிலும் சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா ரன் ஏதும் எடுக்காமலும் சிராஜ் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா 4 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் தசுன் ஷனகா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். இலங்கை அணி 12 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: