அதைத்தொடர்ந்து ஓர் நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதி தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாள்களாக கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக தனது மனைவி லதாவுடன், கோவை விமானநிலையம் வந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.