புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள சேலியமேட்டில் உள்ள கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் ஓவிய ஆசிரியர் உமாபதி கைவினை பொருட்களை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்து வண்ணமயமான கலைப் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுரைக்காய் குடுவைகளை பயன்படுத்தி மாணவர்கள் சிறிய விநாயகர் முதல் பெரிய விநாயகர் வரையிலான சிலைகளை ஆர்வமுடன் செய்துள்ளனர். இது போன்று சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை நம்மைச் சுற்றியுள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி செய்தால், மாசற்ற சுற்றுப்புறத்தை உருவாக்க முடியும்.
விநாயகர் சதுர்த்தி… புதுச்சேரி மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகம்
இந்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும் என்றும் சுற்றுச்சூழலை காப்போம். கலை நயம் பேணுவோம் என்றும் பள்ளியில் பயிலுகின்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் சத்தியா தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.