படம் ஆரம்பித்து பள்ளிப் பருவத்து முதல் காதல், ஏக்கம், மீண்டும் அதே காதல், அதற்குக் கவிதை எனப் பல கிளிஷேக்களை சில மணிநேரங்கள் உலாவ விட்டு ஒருவழியாக மைய கதைக்கு வந்து சேர்கிறார்கள். இதில் காதல் காட்சிகளுக்கு எழுதப்பட்ட வசனங்கள் எல்லாம் பெரும் சோதனை முயற்சி. ஆல்டர்நேட் ரியாலிட்டி என்று அடித்து ஆட வேண்டிய வித்தியாசமான கதைக்களத்தில், திரைக்கதையைச் சுவாரஸ்யமாக மாற்ற நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதீத செயற்கையான காதல் காட்சிகளை வைத்து வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறது திரைக்கதை அமைத்த விக்னேஷ் கார்த்திக் – கிஷோர் சங்கர் கூட்டணி.
