“மொழி போராட்டத்திற்காக கைக்குழந்தையுடன் தாயும் சிறைக்கு செல்லும் வரலாற்றை தந்தை பெரியார் உருவாக்கினார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் தமிழகத்திற்கு மறுமலர்ச்சி, புதிய பாதை, சுயமரியாதையை ஏற்படுத்தினார். பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்தில் உரிமை, இளம்பெண் திருமணம் எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு என பல்வேறு புரட்சிகளை செய்தார்.