இது தொடர்பாக நம்மிடம் பேசியவர்கள்,

‘’இப்ப போயிட்டிருக்கிற கதையை முடிச்சுட்டு, ’ஐந்தாண்டுகளுக்குப் பிறகு’ன்னு போட்டு ‘பார்ட் 2’ எடுக்கறதாத்தான் முதல்ல முடிவு செய்திருந்தாங்க. யூனிட்டே அடுத்த பார்ட்டுக்குத் தயாராகிடுச்சு. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துல இருந்து அந்த சீசன் தொடங்கலாம்னு எதிர்பார்த்தோம்.

சீரியலின் டைட்டிலை மட்டும் வேணும்னா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’க்குப் பதிலா ‘பாண்டியன் இல்லம்’னு மாத்திக்கலாமானு கூட யோசிச்சிட்டிருந்தாங்க.

எல்லாம் பக்காவா போயிட்டிருந்த சூழல்லதான் நடிகை சுஜிதா, குமரன் ரெண்டு பேரும் ‘நாங்க இரண்டாவது சீசன்ல நடிக்கலை’னு சொன்னதா தகவல் வந்தது.

விசாரிச்சப்ப அது உண்மைதானும் தெரிஞ்சது. சுஜிதா பெர்சனல் கமிட்மெண்ட்னாலயும் குமரன் சினிமா பண்ணப் போறதாலயும் நடிக்க மறுக்கிறதாச் சொன்னாங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த சீரியலைப் பொறுத்த வரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துல இருக்கிற எல்லா ஆர்ட்டிஸ்டுகளுமே ரசிகர்களுக்குப் பிடிச்சவங்களா ஆகிட்டாங்க. அதனால அதே ஆர்ட்டிஸ்டுகள் நடிச்சாதான் முதல் சீசனுக்கு கிடைச்ச வரவேற்பு இரண்டாவது சீசனுக்கும் கிடைக்கும்கிறதால சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்புல இந்த ரெண்டு பேர்கிட்டயும் பேசினாங்க.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுல ரெண்டு பேரும் தங்கள் முடிவைக் கைவிட்டுட்டு ரெண்டாவது சீசன்ல நடிக்கச் சம்மதிச்சிட்டதாத்தான் சொன்னாங்க. இது நடந்து ரெண்டு வாரம் இருக்கும்.

ஆனா இப்ப லேட்டஸ்டா என்ன தகவல்னா, வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா மறுபடியும் இவங்க நடிக்க மறுக்கறதாத் தெரிய வருது.

எங்களுக்குத் தெரிய இவங்க ரெண்டு பேருக்கும் வேறு எந்த கமிட்மெண்டும் இருக்கற மாதிரி தெரியலை. என்ன காரணத்துக்காக இவங்க இப்படி நடந்துக்கறாங்கன்னும் யாருக்கும் தெரியலை’’ என்றார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: