சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 30 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த ஆதித்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து கீழமேல்குடி அருகேயுள்ள தெக்கூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் ரஞ்சித் (21), கஜேந்திரன் (19), அருண்குமார் (22) மற்றும் 16 வயது சிறுவனிடம் ஆதித்யா தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ஒடிசா பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடினர்.