திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியான ராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரியில் சமூக நீதி நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
திருவாரூர் பெண்கள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமூக நீதி நாள் நிகழ்ச்சியில் நகைச்சுவை நாவலர் புலவர் சண்முக வடிவேல் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதி குறித்து கல்லூரி சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
மேலும் சமூக நீதி குறித்து மாணவிகளுக்கு விளக்கும் வகையில் நகைச்சுவை நாவலர் புலவர் சண்முக வடிவேல் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் கல்லூரி மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவிகள் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் ஆகிய நடனங்கள் ஆடினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி மற்றும் கல்லூரி அறங்காவலர் பெஜிலா பெரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.