உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயிரியல் வல்லுனர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2021- ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ கிராண்டே பகுதியில் நரி போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் மீட்கப்பட்டது. காயம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த உயிரினம் குறித்து உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். பார்ப்பதற்கு நாய் அல்லது நரி போன்ற தோற்றம் கொண்ட இந்த விலங்குக்கு நாய் வழக்கமாக உண்ணும் உணவு பொருட்களை பராமரிப்பாளர்கள் கொடுத்தனர்.
ஆனால் இந்த உயிரினம் குட்டி எலிகளை விருப்பத்துடன் சாப்பிட்டு வந்தது. அதன் கண்கள் வீட்டு நாயை போன்றும், காதுகள் நீண்டு நரியைப் போன்றும் தோற்றம் அளித்தது. மேலும் இந்த விலங்கு நாயைப் போன்று கத்தி வந்துள்ளது. இந்நிலையில் இந்த உயிரினம் நாய் – நரி இணைந்த கலப்பினம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்பினத்தில் கண்டறியப்பட்ட முதல் உயிரினம் இதுதான் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி மேலும் அவர்கள் தெரிவித்ததாவது-
இந்த கலப்பு உயிரினம் நாய் போன்று சாதுவாக காணப்படவில்லை. காட்டு விலங்குகளுக்கு இருக்கும் ஆபத்தான குணங்கள் இருந்தன.
பெண் கலப்பினமான இது மனிதர்களிடம் நெருங்கி பழகாது. காயம் அடைந்திருந்ததால் இந்த கலப்பினத்திற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின்னர் பூரண குணம் அடைந்தது.
நாய் – நரி கலப்பினத்திற்கு டாக்ஸிம் (Doxim) என்று பெயர் வைத்திருந்தோம். அதனை நன்றாக பராமரித்த பின்னர் உடல் நிலை தேறியதும் அதனை சான்டா மரியா நகரில் உள்ள உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும் இந்த டாக்ஸிம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்து விட்டது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்று தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.