வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராம்பூர் : சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான அசம்கானின் வீடு , அலுவலகங்கள் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அவர் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உ.பி., மாநிலம் ராம்பூரில் உள்ள சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரான அசம்கானின் வீட்டில், கடந்த புதன்கிழமை(செப்.,13) முதல் 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று காலை சோதனை முடிந்தது. பிறகு நிருபர்களை சந்தித்த அசம்கான் கூறுகையில், ‛‛ வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 3 நாட்கள் தங்கியிருந்த அவர்கள், சோதனை நடத்தி கேள்விகள் கேட்டனர்”. இவ்வாறு அவர் கூறினார்.

செப்., 13ல் உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களில் அசம்கான் தொடர்புடைய 30 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: உ.பி.,யின் ராம்பூர், ஷஹாரான்பூர், லக்னோ, காசியாபாத், மீரட் மற்றும் ம.பி., யின் சில இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அசம்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளை தொடர்பாக இந்த சோதனை நடந்தது. அசம்கான் தலைவராக உள்ள பல்கலைகழகம் தவிர்த்து பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து அலுவலகமும் சோதனைக்கு தப்பவில்லை. அசம்கான் ரூ.800 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் உள்ளதால், அரசு ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அசம்கான் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு சமாஜ்வாதி கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய விசாரணை அமைப்புகளை, மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: