WhatsApp Scam:
வாட்ஸ்அப்பிலும் ட்ரூகாலர் சேவைகள் தொடங்கப்படும் என்று ட்ரூகாலர் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி தெரிவித்தார். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் சமீபகாலமாக வாட்ஸ்அப்பில் தெரியாத மற்றும் வெளிநாட்டு நம்பர்களிலிருந்து மோசடி அழைப்புகள் வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
எனவே இதை தடுக்கும் நோக்கில் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து ட்ரூகாலர் நிறுவனம் செயல்படுவது. இதன்மூலம் வாட்ஸ்அப்பிற்கு வரும் மோசடி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை பிளாக் செய்ய முடியும். தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.