பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை விஷ பாம்பு கடித்தது. இதனால் அலறிய அவரை உறவினர்கள் பொதட்டூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் நாகரத்தினம் (31) பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.