சேலம்:

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டு எரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெயிலால் மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மேலும் செல்வகணபதி இளநீர்,தர்பூசணி,நொங்கு,மோர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் நகர மன்ற தலைவர் பாஷா, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *