சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: –

ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி சேலம் கோரிமேடு வழியாக ஏற்காட்டுக்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனும் திக்கப்படுகிறது.

இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வழியாக அயோத்தியாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள குப்பனூர் சாலையை ஏற்காடு செல்ல பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல் லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: