லக்னோ: 16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
160 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு ஷிகர் தவான் இல்லாததால் புதுமையான இணை ஓப்பனிங்காக களம்கண்டது. ஆனால் அது நிலைக்கவில்லை. அறிமுக வீரராக களமிறங்கிய அதர்வா தைடேவை லக்னோ அணியில் அறிமுகம் கண்ட யுத்வீர் சிங் பூஜ்ஜியத்தில் அவுட் ஆக்கினார். அவரை மட்டுமல்ல மற்றொரு ஓப்பனர் பிரப்சிம்ரன் சிங்கையும் 4 ரன்களில் நடையைக்கட்ட வைத்தார் யுத்வீர் சிங்.