லக்னோ: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 159 ரன்களை சேர்த்துள்ளது.
16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் கிளம்பினார்.