இந்தியாவில் கடைசி மனிதனுக்கு, தீண்டாமை என்ற பெயரால், சமூக ஒடுக்குமுறை என்ற பெயரால் இழைக்கப்படுகிற கொடுமைகளை ஒழித்துக் கட்டவேண்டும். இதை செய்வதற்கு, அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தை ஒழித்துக்கட்ட டாக்டர் அம்பேத்கர் தூக்கி பிடித்திருக்கிற போராட்டம் இந்தியாவிலே முன்னெடுக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்படுகிற பல்வேறு கொடுமைகளை தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில்கூட இன்னமும் பட்டியலின மக்கள் நுழைந்து வழிபட தடை விதிக்கப்படுகிற நிலைமை இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த சமூகஒடுக்கு முறை பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை நடத்திட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அனைத்து அமைப்புகளும் ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நடத்துவதற்கு அண்ணல் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சட்டம் உரிமையை கொடுத்திருக்கிறது. அந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமைகளை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பதே மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.