Loading

​திருச்சியில் ​ஏப்ரல்​ 24-ம் தேதி ஓ​.​பி​.​எஸ் தலைமையில் முப்பெரும் விழா மாநா​டு நடைபெறவிருக்கிறது. இதற்கு​​ தேனி மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகளை அழைத்துவருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ​பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் ​மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஓ​.​பி​.​எஸ்​-​ஆல் பொறுப்பாளர்களாக ​நியமிக்கப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஓ.பி.எஸ் – பண்ணை வீடு

​அப்போது பேசிய ஓ​.​பி​.​எஸ்​, “சசிகலா, டி​.​டி​.​வி-யிடம் முதல்வர் பதவியைப் பெற்ற பின்பு ​அவர்களையே ​ஏமாற்றியவர்​ எடப்பாடி பழனிசாமி. இருந்தபோதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. அதையே சசிகலா தொடர்ந்து வலியுறுத்திவரு​கிறார். 

​தேனி மாவட்டத்தில் கட்சி நிதி திரட்டுவதற்காகப் பல கட்சிகள் தொழிலதிபர்களிடம் கையேந்தி நிற்​கின்றனர். ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தேனி மாவட்டத்தை முழுமையாக நிர்வகிக்கும்போது யாரிடமும் கையேந்தி நிற்காத நிலை​யில் இருந்தது. எதுவேண்டுமானலும் தன்னிடம் கேட்கச் சொன்னார். அவர் இங்கிருந்து போகும்போது என்னிடம் அதைத்தான் சொல்லிச் சென்றார். எப்படி அவர் சொல்லி, மாவட்டத்தைத் தன்னிடம் விட்டுச் சென்றாரோ, அதே போன்று தற்போதுவரை எந்தத் தொழிலதிபரிடம் கட்சி நிதிக்காகக் கையேந்தவில்லை​.

டி.டி.வி.தினகரன்

​சென்னை செல்லும்போதெல்லாம் மாவட்டச் செயலாளர் சையது கான், டி.டி.வி.தினகரனைச் சந்திப்பார், நான் இதுவரையிலும் தடுக்கவில்லை​. ஆனால், அவரிடம் ஒன்றை மட்டும் கூறுவேன். எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்றிணைத்துவிடுங்கள்” எ​ன்று பேசினார். 

ஏற்கெனவே பெரியகுளம் நகராட்சி தண்ணீர்ப் பிர​ச்னைக்காக  ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், அ.ம.மு.க-வினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதே மாவட்டச் செயலாளர் சையதுகான், `விரைவில் அதிகாரபூர்வமாக இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறியிருந்தார். தற்போது ஓ.பி.எஸ் நிர்வாகிகள் முன்னிலையில் டி.டி.வி-யுடன் இணைவது தொடர்பாகப் பேசியதை ஆதரவாளர்கள் வரவேற்றனர். ​

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *