கர்நாடகாவின் லிங்காயத்துகள் சமூகத்தினரிடம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பின்னர், மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் சாவதி, 2004, 2008, 2013 என மூன்று முறை தொடர்ந்து அதானி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், 2018-ல் அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் தனது நெருங்கிய ஆதரவாளர் என்பதால் லக்ஷ்மனை மேல்சபை உறுப்பினராக்கி துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார் எடியூரப்பா. அதன் பின்பு பசவராஜ் பொம்மை முதல்வரானதும் லக்ஷ்மன் சாவதி மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போதைய தேர்தலிலும் அவர் ஓரம் கட்டப்பட்டார். இந்த நிலையில் தான் லக்ஷ்மன் சாவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.