வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாலசோர்: ஒடிசாவில் தீயசக்திகள் விலகி விடும் என்ற மூடநம்பிக்கையில், சிறார்களுக்கும், நாய்களுக்கும் திருமணம் நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

latest tamil news

ஒடிசாவில், பாலசோர் மாவட்டத்தின் சோரோ பகுதியில் உள்ள பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்விக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.

latest tamil news

நேற்று, 11 வயது சிறுவனுக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது. இதே போல், 7 வயது சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது. குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின், இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என, அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.

Advertisement


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: