புதுடில்லி: மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

latest tamil news

சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளை உள்ளடக்கிய சி.ஏ.பி.எப். (CAPF) அமைப்பிற்கு ஆட்களை தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. சிஆர்பிஎப் தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

latest tamil news

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ‛ மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024 ஜனவரி 1ம் தேதி முதல் சிஏபிஎப் தேர்வு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Dinamalar iPaper Combo
-->


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: