Loading

உக்ரைன் – ரஷ்யா போர் முதல், உலகக் கோப்பை கால்பந்து வரை உலகில் நடந்த எதுவுமே தெரியாமல், 500 நாட்களை குகையில் கழித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர்.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்த 50 வயதான ஃப்ளமினி. இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ள குகை ஒன்றிற்குள் 2021ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார். உளவியலாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், குகை ஆய்வாளர்கள் என பலரின் கண்காணிப்பில் இருந்தாலும், 500 நாட்கள் வரை யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்தவர், வெற்றிகரமாக இலக்கை நிறைவு செய்து வெளியே வந்தார்.

குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொரு நாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோ பதிவு செய்துள்ளார். தனது 48ஆவது வயதில் குகைக்குள் சென்ற இவர் இரு பிறந்தநாளை குகைக்குள்ளேயே கொண்டாடினார். இவர் குகைக்குள் இருந்த காலக்கடத்தில் தான் உக்ரைன்-ரஷ்யா போர், உலகக் கோப்பை கால்பந்து போட்டி, துருக்கி நிலநடுக்கம் போன்ற முக்கிய சம்பவங்கள் உலகில் நிகழ்ந்தன. ஆனால், இவற்றில் இருந்து துண்டுபட்டு தனி வாழ்க்கையை ஃப்ளமினி வாழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தொப்பை இருந்தா தான் பொண்ணு… எத்தியோப்பியா பழங்குடியினரின் விநோதம்..!

செர்பியர் ஒருவர் 2016ல் 460 நாட்களை குகையில் நிறைவு செய்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஃப்ளமினி முறியடித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *