இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, இரு நாடு இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது, இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரிஷி சுனக் கூறினார்.
மேலும் தூதரகம் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்ரவாதம் அளிப்பதாக சுனக் உறுதி அளித்தார். பின்னர், பொருளாதார குற்றவாளிகள் இங்கிலாந்தில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஏற்கெனவே தஞ்சம் அடைந்திருப்பவர்களை இந்திய நீதித்துறை முன்பு நிறுத்துவதற்கு உறுதுணையாக இருக்குமாறும் மோடி அறிவுறுத்தினார்.
Also Read : அம்பேத்கர் பிறந்த நாள்.. டெல்லியில் பிரதமர், குடியரசு தலைவர் மரியாதை!
இதனை தொடர்ந்து செப்டம்பரில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரிஷி சுனக்கிற்கு மோடி அழைப்பு விடுத்தார். அப்போது, இந்தியாவின் அனைத்து முன்னெடுப்பிற்கும் இங்கிலாந்து துணை நிற்கும் என்று ரிஷி சுனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.