அதே சமயம், தற்காலிக ஏற்பாடாக, சீதாலா கோவிலில் இந்த லிங்கம் வைக்கப்பட்டது. அங்கு 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த லிங்கத்தை வழிபடுவது இயலாத காரியம் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவலிங்கம் மீண்டும் குளத்தின் கரைக்கே கொண்டு வரப்பட்டது.இந்த நிலையில் குளத்தின் கரையிலேயே கொட்டகை அமைத்து லிங்கத்தை நிறுவவும், அதை வழிபாடு செய்யவும் உள்ளூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது.