திருப்பத்தூர்: அதிமுகவை நாசம் செய்வது தான் ஓபிஎஸ்சின் ஒரே நோக்கம் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் நகர அதிமுக சார்பில், உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினர் படிவங்களை அதிமுக நிர்வாகிகளிடம் வழங்கிப் பேசியதாவது, ''தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைப்படி, 2 கோடி உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறையும் போது, அதிமுகவில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். அதன் பிறகு பொறுப்புக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒன்றரை கோடி பேர் அதிமுகவில் உறுப்பினர்களாக மாறினர்.