டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் மதுபான கூடங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதன் நீட்சியாக மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க; மம்தா பானர்ஜி ஆட்சி 2025 வரை நீடிக்காது… காரணம் சொல்லும் அமித்ஷா..!
தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், பாஜக திட்டமிட்டு சம்மன் அனுப்பி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், சிபிஐ முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆவார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. மேலும், பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை சிபிஐ சம்மன் மூலம் நிறுத்த முடியாது என்றும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.