இந்தியா:
இந்தியாவின் அரசுடைமையான தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் ஆகும். தற்போது பிஎஸ்என்எல் பல சிறப்புமிக்க திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல்(BSNL) சிறப்புமிக்க திட்டங்களில் ஒன்றான வருடாந்திர திட்டத்தை பற்றி பார்போம். ரூ.1999-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு உள்ளூர்,ரோமிங் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்பு வசதிகளை பெறலாம்.
மேலும் தினமும் 100 குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும், 600ஜிபி டேட்டா வசதியும் இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுகின்றனர். அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு தீர்வாகவும், நீண்ட கால திட்டமாகவும் அமைகிறது.