காரைக்கால் : காரைக்கால் சனி பகவான் கோவிலுக்கு பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனிபகவான் அருள்பலித்து வருகிறார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
காரைக்காலில் கடந்த சில நாட்காளாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சனி பகவான் கோவிலுக்கு பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இன்று 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி, தொடர் விடுமுறையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
Advertisement