சென்னை: சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பட்டா வழங்குவது தொடர்பாக ஆர்.காமராஜ் (அதிமுக), க.அன்பழகன், தாயகம் கவி (திமுக) உள்ளிட்டோர் பேசினர்.
அதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: சாதி, வருமானம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்க 15 நாள் அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, 4.65 லட்சம் சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. தற்போது 785 மட்டுமே நிலுவையில் உள்ளன.