இப்படியான நிலையில், ஐ.ஏ.எஸ் ரோகிணி பெங்களூரு சிவில் கோர்ட்டில் ரூபாவுக்கு எதிராக, மானநஷ்ட வழக்கு பதிவுசெய்து, ‘‘என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை ரூபா சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், ரூ.1 கோடி ரூபாய் நஷ்டஈடு அவர் வழங்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரோகிணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் படங்கள், தகவல்களை வெளியிடக் கூடாது என, ரூபா, கூகுள், மெட்டா தளங்கள் என, 59 ஊடகங்களுக்குத் தடைவிதித்தது.

இதற்கு எதிராக ரூபா உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுமீது, நேற்று முன்தினம், விசாரணை நடந்தது. அப்போது, ரூபா தரப்பில் ஆஜரான வக்கீல் மதுக்கர், ‘‘ரோகிணி சிந்தூரி பதிவுசெய்த வழக்கில், சட்டப்படி இடைக்காலத்தடை குறித்த அறிவிப்பு, இதர ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அவர் எந்த ஆவணமும் சமர்ப்பிக்காததால், இடைக்காலத்தடையை ரத்துசெய்ய வேண்டும்” என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ரூபா மீதான இடைக்காலத்தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.
இடைக்காலத்தடை நீக்கம் செய்யப்பட்டதால், IAS ரோகிணி மீது IPS ரூபா மீண்டும் ஏதேனும், ஊழல் புகார்களை முன்வைப்பாரா… இல்லை, அரசின் வாய்மொழி உத்தரவைப் பின்பற்றி பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.