திருச்சி: திருச்சியில் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சிறுமியின் தாய் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.