Loading

சென்னை: துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

இதில், அவர் 1 கிலோ 228 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல, துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானப் பணிகள் இருவர் 1 கிலோ 965 கிராம் தங்கம் மற்றும் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை மறைத்து வைத்திருந்து தெரியவந்தது.

மேலும், விமான நிலைய கழிப்பறை பகுதியில் 974கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.2.18 கோடி மதிப்பிலான, 4 கிலோ 167 கிராம் தங்கம் மற்றும் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *