Loading

புதுச்சேரி: மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வை 3,610 மாணவர்கள் எழுதினர்.

மத்திய கல்வி அமைசக்கம் வழிகாட்டுதலின் பேரில், புதுச்சேரி மாநிலத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை தேர்வு நேற்று நடந்தது.

இத்தேர்விற்கு மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு மாணவர்கள் 3,764 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3,610 பேர் நேற்று தேர்வு எழுதினர். இதன் மொத்த சதவீதம் 95.91 ஆகும்.

இத்தேர்விற்கான கேள்வித்தாள் மற்றும் விடை குறிப்புகள் https://www.nmmsntspdy.com என்ற இணையதள முகவரியில் வரும் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.

விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 23ம் தேதிக்குள் nmmsnts@dsepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதியலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *