Loading

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீடு புகுந்து நகை, பணம் திருடிய சென்னை மருமகன் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள சாவடி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் மாலதிக்கும், சென்னையைச் சேர்ந்த கந்தவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மாலதி தற்போது பெற்றோர் வீட்டில் உள்ளார். அவரது கணவர் சென்னையில் இருந்தார். இந்நிலையில் நேற்று லட்சுமி, மாலதி ஆகியோர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 1 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். விசாரணையில், மருமகன் கந்தவேல் மீது சந்தேகம் எழுந்தது. அவரது செல்போனில் பேசியதுபோது அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பது தெரிந்து, போலீஸார் அவரை பிடித்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், மாலதியை பார்க்க நேற்று வீட்டுக்கு வந்தபோது, அவரும் அவரது மாமியாரும் வீட்டில் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி நகை, பணம் திருடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவீந்திரன் அவரை கைது செய்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *