மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செயல்பாட்டிற்காக தன்னலமின்றி தனது அரச மாளிகையை வழங்கியவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், கொடைக்கானல் படகு மற்றும் ரோயிங் கிளப் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். 1935 ஆம் ஆண்டு ஜார்ஜ் V வெள்ளி விழா பதக்கம், 1937 ஆம் ஆண்டு ஜார்ஜ் VI முடிசூட்டு விழா நினைவுப் பதக்கம் ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டவர்.