Loading

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கிவரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது’ எனக் குறிப்பிட்டு புகார் தெரிவித்திருந்தார்.

image

மேலும் அவர் தனது மனுவில், “இந்த கல்குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர். இரண்டு யூனிட் மட்டுமே கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கடத்தல் நடந்து வருகிறது. அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எதிராகவும், கேரளாவுக்கு அதை கடத்துவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கல், ஜல்லிகள் எடுத்துச் செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

image

குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகக் கூறுவது உண்மையா என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, அனுமதியின்றி குவாரிகள் செயல்படுவது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க்கப்பட்டது. இதனையடுத்து, மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *