Loading

புதுச்சேரி-புதுச்சேரியில் கடலோர காவல் படையினர் பைக் ஊர்வலம் சென்றனர்.

ஆண்டுதோறும் பிப்., 1ம் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிழக்கு பிராந்தியத்துக்கு உட்பட்ட புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு செயல்படும், புதுச்சேரி கடலோர காவல் படையில் 47 வது எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது.

லாஸ்பேட்டையில் உள்ள கடலோர காவல்படை தலைமை அலுவலகத்தில் இருந்து பைக் ஊர்வலம் நேற்று முன்தினம் புறப்பட்டு, பெரிய முதிலியார்சாவடி வரை சென்றது. பைக் ஊர்வலத்தை புதுச்சேரி கடலோர காவல்படை கமாண்டர் டி.ஐ.ஜி அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், பெரிய முதலியார்சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள், கடலோர காவல் படையினர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

-->

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *