அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் மோடி பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கடந்த 3 நாள்களாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்றுகூட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “முன்பு அதானியின் விமானத்தில் பிரதமர் மோடி பறந்தார். தற்போது மோடியின் விமானத்தில் அதானி பறக்கிறார்” என்று நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். மக்களவையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய மோடி, “மக்களவையில் நேற்று சிலரின் கருத்துகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்த சூழலும், அவர்களின் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர். குடியரசுத் தலைவர் உரை நடந்துகொண்டிருந்தபோது, சிலர் அதைத் தவிர்த்தனர்.