இடைத்தேர்தல்: போட்டியிலிருந்து ஓ.பி.எஸ் வாபஸ்..? முழு பின்னணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களை சமர்பிக்க வேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள் கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுகின்ற பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிலிருந்து வாபஸ் பெறும் முடிவுக்கு வந்ததற்கான
முழு பின்னணி குறித்த விரிவான தகவல்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்க…
பன்னீர் செல்வம் அறிக்கை
மேலும், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், ” இரட்டை இலை சின்னத்தில் யார் நிற்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம்” என அறிவித்தார்.
மேலும், ஓ. பன்னீர் செல்வம் தனது அறிக்கையில், ” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.