chidam

சிதம்பரம்:  சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் சிலை மாயமானதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற இளமையாக்கினார் கோயில் உள்ளது. இந்த கோவில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது.

சிலை இருந்த போது எடுத்த படம்
இளமையாக்கினார் கோவில்

இந்நிலையில் கோயில் வெளிப்பிரகாத்தில் இருந்த திருநீலகண்ட நாயனார் – ரத்னா சாலை தம்பதியர் சிலை காணாமல் போய்விட்டது.

இதுகுறித்து கோயில் டிரஸ்டி பழனியப்பா செட்டியார் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *